இறையச்சம் மஸ்ஜிதுக்குள் மட்டுமா
19-08-2022 MUHARRAM- 20 بسم الله الرحمن الرحيم இறையச்சம் மஸ்ஜிதுக்குள் மட்டுமா الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ (191)ال عمران وقال النبي صلى الله عليه وسلم : « من أطاع الله عزَّ وجلَّ فقد ذكره ومن عصاه فقد نسيه تفسير التستري இன்றைய காலத்தில் பல முஸ்லிம்கள் தொழுகையை வெறும் சடங்காக மட்டும் உள்ளச்சமின்றி நிறைவேற்றுகின்றனர். இதனால் தொழுகை மட்டும் தான் அவர்களிடம் இருக்கிறதே தவிர பள்ளியை விட்டு வெளியேறியவுடன் பொய், பொறாமை, வஞ்சகம், ஆளுக்குத் தகுந்த மாதிரி நடித்தல், மற்றவர்களைத் தாழ்வாக கருதுதல், கொடுக்கல் வாங்கலில் மோசடிபோன்ற பல்வேறு தவறுகள் தொழுபவர்களிடமும் குடி கொண்டுள்ளது. தொழுதால் எல்லாம் மன்னிக்கப் பட்டு விடும் என எண்ணுகின்றனர். சிறுபாவங்கள் மட்டும்தான் மன்னிக்கப்படுமே மேற்படி பெரும்பாவங்கள் மன்னிக்கப்படாது தொழுதால் மட்டும் சுவனம் கிடைத்து விடுமா ? நெற்றியில் சஜ்தா அடையாளம் உள்ள சிலரும் நரகத்தில் இருப்பர்...