Posts

Showing posts from June, 2022

ஆசை ஆசையாய்

.ஆசை ஆசையாய். وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் நீங்கள் முழுமையாக்குங்கள். திருக்குர்ஆன் :- 2:196 ஹஜ் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். கலிமா, தொழுகை, நோன்பு என்பதெல்லாம் உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்ட வணக்கமாகும். ஸகாத் என்பது பொருளுடன் சம்பந்தப்பட்ட வணக்கமாகும். ஆனால் ஹஜ் என்பது உடலாலும், பொருளாலும் சேர்ந்து செய்யப்படும் சற்று மாறுபட்ட ஓர் உன்னத வணக்கமாகும். மார்க்க அறிஞர்கள் இஸ்லாமிய வணக்கங்களின் தத்துவத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்கள். 1) ஐவேளை தொழுகை என்பது ஒரு நாள் திட்டம் (One Day Programe) 2) ஜும்ஆ தொழுகை என்பது ஒரு வாரத் திட்டம் (One Week Programe) 3) ரமளான் மாத நோன்பு மற்றும் ஸகாத் என்பது ஓராண்டுத் திட்டம் (One Year Programe) 4) ஹஜ் என்பது ஆய்வுத் திட்டம் (Life Programe) என்று வகைப்படுத்தி இவ்வாறு பெய...

முதல் மஸ்ஜித்

முதல் ஆலயம் اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌ۚ‏  وَصَلاَةٌ فِي الْمَسْجِدِ الأَقْصَى بِخَمْسِينَ أَلْفِ صَلاَةٍ وَصَلاَةٌ فِي مَسْجِدِي بِخَمْسِينَ أَلْفِ صَلاَةٍ وَصَلاَةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ بِمِائَةِ أَلْفِ صَلاَةٍ உலகத்தில் உள்ள நகரங்களில் மிக சிறந்த நகரம் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா என்ற நகரமாகும். இது வரலாற்று ரீதியாக மிகவும் தொன்மையான நகரமாகும். இது அனைத்து இறைத்தூதர்களும் கால் பதித்த புண்ணிய பூமியாகும். உலக முஸ்லிம்கள் அதை நோக்கியே தொழ வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் முதன்முதலில் பூமியை விரித்தபோது முதலில் மக்காவை தான் உருவாக்கினான். ஆகவேதான் உம்முல் குரா (நகரங்களின் தாய்) என பெயர் வரலாயிற்று. ஒரு பெண் தொலைந்துப் போன தன் பிள்ளையை நீண்ட காலத்திற்கு பிறகு சந்திக்கும் போது என்ன மனநிலையில் இருப்பாளோ அது போன்று தான் கஅபாவை முதன்முறையாக பார்ப்பவனின் மனநிலையும் இருக்கும். அவனையும் அறியாமல் அவனது கண்கள் கண்ணீர் வடிக்கும். அல்லாஹ்வையே பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும்...